Friday, April 15, 2011

Nanook of the north எனது திரைப்பார்வை……




திரைப்படமானது குறிப்பிட்ட இனத்தவரின் வாழ்க்கை முறையினை சித்தரித்து காட்டுவதாக அமைந்துள்ளது. இ

க்ளு எனப்படும் பனிக்கட்டி வீடுகளில் வாழும் எக்ஸிமோவர் இனத்து மக்களுடைய் வாழ்க்கை முறையினை சித்தரித்து காட்டுவதாக அமைந்துள்ளது.  அதாவது அவர்களினுடைய நாளாந்த வாழ்க்கை முறை உணவுப்பழக்கவழங்கள்; இவர்களினுடைய வாழ்வியல் அமைப்பு முறை என்பன இப் படத்தின் ஊடாக வெளிப்படுத்தி காட்டப்பட்டுள்ளது. இத் திரைப்படம் பேச்சு வார்த்தை எதுவும் இன்றி ஒலி, ஒளி மட்டும் வைத்து அழகாக எடுக்கப்பட்டுள்ளது. மொழிப் பிரயோகமே இங்கு காணப்பட வில்லை. இத் திரைப்படம் 1922ஆம் ஆண்டு கறுப்பு வெள்ளைப்படமாக வெளிவந்தது. 


காலநிலைக்கு ஏற்றபடி வாழ்கின்ற இம்மக்கள்; அவர்களின் உணவுத்தேவையைப்பூர்த்தி செய்ய எவ்வாறான சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது என்பது பற்றியும் தெளிவாகச் சொல்கி.; ஆதி காலத்தில் மனிதன் உணவை சமைக்காது உண்பது போலவே இவர்களும் பச்சையாக உணவை உண்கின்றார்கள். அதிலும் குறிப்பாக குடும்பத்தில் உள்ள எல்லோருமே ஒன்றாக சேர்ந்து சென்று உணவு தேடுகின்றார்கள.;.இவர்கள் வாழ்கின்ற  நிலம் ஐஸ் கட்டி. இதனால் நிலத்திற்கு கீழேயே உள்ள கடல் வாழ் உயிரினங்களை  பிடித்து பச்சையாக உண்கின்றனர்.  அத்துடன் குளிரை சமாளிக்கும் விதத்தில் ஆடைகளையும் அணிந்து தம்மை பாதுகாத்துக் கொள்கின்றனர்.

  இவர்கள் தமது குழந்தைகளை குளிரில் இருந்து பாதுகாக்க தம் உடம்போடு சேர்த்து அனைத்து வைத்திருக்ககூடியபடி  ஆடைகளை அணிந்துள்ளனர். அவர்கள் இக்லு முறையிலான வீடுகளைக் கொண்டவர்களாக வாழ்ந்து வருகின்றனர் .அதாவது; பனிக்கட்டிகளைக்கொண்டு தம் வீடு அமைக்கின்றார்கள். தம் உதவிகளுக்காக அதாவது பிரயாணம் செய்ய நாய்களைப் பயன்படுத்துகிறார்கள். சில சமயங்களில் நாய்களுக்கிடையே சண்டைகளும்; ஏற்படுகின்றன பனிக்கட்டியால் ஓர்; கட்டிடம் அமைத்து அங்கு தங்குகின்றனர்..இந்தவகையில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் உணவுத் தட்டுப்பாட்டை எதிர் கொள்ளும் ஒரு குடும்பத்தின் கதையாக  இது அமைகின்றது. ; திரைப்படத்தில் ஒளி கமரா நன்றாக எடுக்கப்பட்டுள்ளது. பனிக்கட்டி சூழ்ந்த இடத்தில் கமரா எடுக்கப்பட்டுள்ளன இதனால் அழகான காட்சியாக இருந்தது.



படத்தின் கதையை இசையில் மட்டும் எடுத்து காட்டியது சிறப்பாகவும் வேறு படங்களில் இருந்து வேறுபட்ட படமாக இத்திரைப்படம் அமைத்துள்ளது குறிப்பிடலாம்.
  திரைப்படத்தை பார்க்கும் போது ஆரம்பகாலத்தில் வாழ்ந்த மனிதன் இப்படியான போராட்டத்தின் மத்தியில் வாழ்ந்திருப்பார்கள்; என்ற உணர்வை ஏற்படுத்தியது.  

0 comments: