Sunday, April 17, 2011

அங்காடித்தெரு திரைப்படம் எனது பார்வையில்.....

.

ஒரு அடுக்குமாடி பல்பொருள் அங்காடியில் பணி புரிய, திருச்செந்தூர்

அருகேயுள்ள தேரிக்காட்டில் இருந்து கொத்தடிமையாகக் கொணரப் படும் இளைஞர்களின் கதையினைச் சொல்வது மூலம் இது போன்ற நிறுவனங்களில் உள்ள மனிதாபிமானமற்ற நிர்வாகப் போக்குகளையும் மனிதர்களையும் இந்தத் திரைப்படம் மூலமாக அம்பலப் படுத்தியிருக்கிறார் இயக்குனர் வசந்த பாலன்.
 கருனாமூர்த்தி மற்றும் அருன்பாண்டியன் ஆகியோர் தயாரித்த இந்த படத்தை ஜங்கரன் இன்டர்னே}ஸனல் நிறுவனம் வெளியிட்டது மகேசு, அஞசலி, இயக்குனர் வெங்கடேசு மற்றும் கனாக்கானும் காலங்கள் பாண்டி ஆகியோர் முக்ககிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நடிகை சினேகா உண்மை ரூபத்திலேயே கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளார். இசை விஜய் ஆண்டனி மற்றும் .வி.பிரகாஸ். புpரபல எழுத்தாளர் செயமேயாகன் இந்த படத்திற்க்கான வசனங்களை எழுதியுள்ளார். இப்படத்தின் ஒளிப்பதிவினை ரிச்சர்ட் மரியநாதனும் பெப்பிரவரி 11,2008ம் ஆண்டு தொடங்கப்பட்ட படம் மார்ச் 26,2010ல் வெளியிடப்பட்டது.சென்னை ரங்கனாதன் தெருவில் உள்ள பிரமாண்டமான வணிக வளாகங்களில் பணிபுரியும் மக்களின் கொத்தடிமை வாழ்க்கை முறைமையை அடிப்படையாக கொண்டு இதன் கதை அமைக்கப்பட்டுள்ளது. இதன் பெரும்பாலான காட்சிகள் அதே தெருவில் உள்ள கடைகளிலளேயே எடுக்கப்பட்டுள்ளன. மேலும் சில காட்சிகள் சென்னை மற்றும் தேனி ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டு விரிந்து செல்கிறது

0 comments: