Friday, April 15, 2011

குழந்தைகளின் சொர்க்கம்


“வறுமையானது ஒருமனிதனை எந்தளவிற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது" என்பதனை சிறப்பாக எடுத்தக்காட்டுகின்றது. அதிலும் சிறுவர்களை எவ்வாறு பாதிக்கின்றது என்பதை சொர்க்கத்தின் குழந்தைகள் திரைப்படம் மூலம் விளக்கப்படுகின்றது. சிறுவர்கள் தங்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற துடிக்கின்றாhகள் என்பது மையக் கதை பின்னர் அவர்களின் எதிர்பார்ப்புக்கள் இறுதியில் நிறைவேறுகிறதா என்பதே இத்திரைப்படத்தின் கதை.
கஸ்ரப்பட்டு சம்பாதித்து
குடும்பத்தைப்பார்ப்பதும் பின்பு பாடசாலைக்குச்செல்வதும் இந்த திரைப்படத்தில் எட்டுவயதான அலி,அவனது தங்கை சாரா என்னும் சிறுவர்களுக்கு பெரும் சவாலாக காணப்படுகின்றது. திரைப்படமானது சப்பாத்தினை கருப்பொருளாகக்கொண்டு  அமைந்துள்ளது.
தனது தங்கையின் பாதணியை யாரோ ஒருவரின் வண்டியில் தவறவிடுகிறான். இதனை தந்தைக்கும் தாய்க்கும் மறைத்து விடுகின்றனர்.
வறுமையி;ல் வாடும் தந்தையால் புதிய சப்பாத்தினை வாங்கிக் கொடுக்க முடியாத நிலையை உணரந்;த அலி,சாரா தங்களிடம் இருக்கும் ஒருசோடி சப்பாத்தினை மாறிமாறி அணிந்து கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகின்றது. சாரா பாடசாலை முடிவடைந்ததும் ஓடோடி வந்து அலியிடம் சப்பாத்தினை கழற்றிக்கொடுக்க அதை அணிந்தபடி அவன் பாடசாலைக்கு ஓடோடிச் செல்வான். இதனால் பலமுறை அவன் பாடசாலைக்கு நேரம் பிந்தி செல்வதும். அப்பாடசாலை அதிபரினால் தண்டிக்கப்படுவதும் உண்டு.

பாடசாலைக்குச்செல்லும் போது கடையில் பலவிதமான புதிய சப்பாத்துக்கள் இருப்பதைப்பார்த்து தனக்கும் “ஒரு சப்பாத்துகிடைக்காதா” என சாரா ஏங்குவதும்,
அதே போல் பாடசாலையில் ஒன்று கூடலுக்காக நிற்கும் போது எல்லோரும் அழகான சப்பாத்து அணிந்திருந்தார்கள். ஆனால் இவள் மட்டும் அழுக்கான அழகற்ற சப்பாத்துடன் நிற்கும் போது, ஆசிரியர் கண்காணிப்பில் ஈடுபடும் வேளை தனது புத்தகப்பையால் தன்னுடைய சப்பாத்தினை மறைத்துக் கொள்கிறாள்.
ஒரு முறை தன்னுடைய அண்ணன் அலி சப்பாத்துக்காக காத்துக் கொண்டு இருப்பான் என்பதற்க்காக பரீட்சையை விரைவாக எழுதிவிட்டு அண்ணன் அலி நிற்கும் இடம் நோக்கி வருகிறாள். வரும் வழியில் ஒரு கால் சப்பாத்து தவறி சாக்கடையினுள் விழுந்த அடித்து செல்கிறது. நீண்ட தூரம் சென்று பலத்த போராட்டத்தின் பின்னரே அதனை அவள் மீட்டு தன் அண்ணன் அலியிடம் கொண்டு சேர்க்கிறாள். அவனோ கோபத்துடன் அவளை திட்டுகின்றான் அவள் சப்பாத்தினை மீட்க கஸ்ரப்பட்டதை அறியாமல். ஆனால் அவள் பதில் ஏதும் கூறாமல் கண்ணீர் வடிக்கின்றாள். இது திரைப்படத்தை பார்த்தவர்களின் உணர்வுகளை ஈரமாக்கிறது. கடையில் அந்தச்சிறுவன் காய்கறிகளை தட்டிவிட்டான் என்று கடைக்காரன் அவனை சிறுபிள்ளைதானே என மன்னிக்காது அடிக்கத்துரத்துவதும், படத்தினை பார்ப்பவர்கள் மனநிலையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.
பாடசாலையில் நடைபெறும் அலி ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்கிறான். தன்னுடைய சப்பாத்து மற்றவர்களின் சப்பாத்தை விட அழுக்காகவும் பழையதாகவும் இருக்கின்றதே என்று. ஆதங்கத்தோடு ஓடுகின்றான். முதலாவதாக சென்று எல்லை கோட்டைதாண்டுகின்றான். அவ்வேளை அலி மகிழ்ச்சி அடைகின்றான்.;அங்கே உள்ள பரிசுப்பொருட்களில் ஒரு சோடி சப்பாத்தும் உள்ளது. ஆனால் இறுதியில் அவனுக்கு அது ஏமாற்றத்தை கொடுக்க கண்ணீர் சிந்தியபடி தனக்கான தங்கப்பதக்கத்தினை பெற்றுக்கொண்டான்.
நீண்ட நாள்களுக்கு பின் புதிய சப்பாத்து அணியப்போகின்றேன் என்ற மகிழ்ச்சியில் அலியின் மனநிலைடிஇருந்திருக்கிருக்கலாம். “புதிய சப்பாத்து கிடைப்பதென்பது சொர்க்கத்தை அடைந்துது போன்றதானவொன்றாக தோன்றுகிறது.” அதற்காக அலிஎடுக்கும் முயற்சிகள் அதனை வெளிப்படுத்தி உணரவைக்கிறது பாதணி இல்லாத நிலையில் அவஸ்தைப்படும் அச் சிறுவர்களுக்கு அந்த சந்தர்பத்தில் பாதணி கிடைப்பதென்பது சொர்க்கம் போன்றதாகவே காட்சியளிக்கும். அலி முதலாவதாக வந்தபடியால் தானே தனக்கும் அந்த சப்பாத்து கிடைக்காமல் போய்விட்டது.ஓட்டப்போட்டியில் மூன்றாவதாக வருவருக்கு தான் அந்த சப்பாத்து வழங்கப்பட்டது.அலிக்கு சப்பாத்து கிடைக்கவில்லை என்பது பாடத்தை பார்த்த அனைவருக்கும் தாம் எதிர்பார்த்தது நடைபெறவில்லை உணரமுடிந்தது.

;.
எனினும் பின்னர் தந்தை தான் சம்பாதித்த பணத்தைக் கொண்டு பாதணியை பெற்றுக்கொடுக்கிறார். இக் குறும்படத்தில் ஏழை பணக்காரன் என்ற சமூக ஏற்றத்தாழ்வும் ஏழைச் சிறுவர்களின் மன ஆதங்கமும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அவர்கள் ஆசையினை நிறைவேற்ற பாடுபடும் தன்மையும் வெளிக்காட்டப்படுகிறது.

பொருத்தமான இடத்தில் பிண்ணனி இசையை வழங்கி இருப்பது படத்திற்கு உயிரோட்டத்தை வழங்கியுள்ளது.  சாதரண சப்பாத்து தான் என ஆனால் சப்பாத்துக்குள் பொதிந்து கிடக்கின்ற உண்மைகளை இத்திரைப்படம் சொல்லி இருப்பது அருமையானது. இறுதியில் அந்த சப்பாத்து அண்ணன் அலி,தங்கை சரா பயன்படுத்த முடியாத அளவுக்கு கிழிந்திருப்பதை பார்த்தவர்களின் மனதில் கவலையை ஏற்படுத்தி இருப்பது உண்மை.
“சொர்க்கத்தின  குழந்தைகள் என்னும்;திரைப்படத்தினை நான் பார்க்கும் போது நான் சிறு வயதில் தவற விட்ட நினைவுகள் மறக்க முடியாமல் இருக்கின்றன. சிறு வயதில் நான் பெற்றோருக்கு சொல்லாமல் பல விடயங்கள் மறைந்தவை எல்லாம் இந்த படத்தை பார்த்தவுடன் எனது கடந்த கால நினைவுகள் மறக்க முடிய வில்லை.”

சொர்க்கத்தின்  குழந்தைகள் திரைப்படமானது 1990ம்ஆண்டு“ஆயதனை அயதனைi”எனபவரால் இயக்கப்பட்ட கனேடியஉலக திரைப்பட விழாவில் மூன்று முக்கிய விருதுகளையும் பெற்றுக்கொணடது.இத் திரைப்படம் ஈரானிய மொழித் திரைப்படமாகும்.

0 comments: